தற்போது தமிழகத்தையை தலைக்குனிவில் ஆழ்த்தியிருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்களின் தாக்குதல்கள் பொதுமக்கள் கண்ணெதிரிலேயே நடை பெற்றுள்ளது. காவல்துறையினர் கல்லூரிக்கு உள்ளே நுழைய கல்லூரி முதல்வர் அனுமதி தராததால் காவலர்களும் வேடிக்கை பார்த்தனராம் ? என்ன கொடுமை சார் இது ?
சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பதால் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். மீறி நடவடிக்கை எடுத்தால் அரசியல் நெருக்குதல்கள், மிரட்டல் என வருவதால் போலீஸார், சட்டக் கல்லூரி மாணவர்கள் விவகாரத்தில் தலையிடுவதே இல்லை என்பது பொதுவான ஒரு குற்றச்சாட்டு.
அதைவிட அதிர்ச்சியான தகவல் சட்டக் கல்லூரி மாணவர்களின் இந்த மோதல் அவர்களுக்கிடையே பல நாட்களாகப் புகைந்து கொண்டிருந்த ஜாதி ரீதியிலான பகையால் ஏற்பட்டது என்பதே. தமிழக கல்லூரிகளில் ஜாதி ரீதியான மோதல்கள் நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது.
மாணவர் மனதில் சாதிய உணர்வு இருப்பதே வேதனையான தகவல் என்றால் , படித்த மனங்களில் கூட சாதிய எண்ணங்கள் ஊடுருவ என்ன காரணம்?
படித்தவர்கள் மத்தியிலும் தலை தூக்கும் இந்த மதம் /சாதி வெறியை ஒழிக்க என்ன வழி?
படிக்காத பாமரர்கள் சாதிப் பிரச்சினைகளுக்காக தங்களுக்குள் மோதிக் கொள்ளும் போது இதற்கெல்லாம் காரணம் கல்வியறிவு இல்லாததே, மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்று விட்டால் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாது என்று பலரும் நம்பி வந்த சூழலில் சட்டம் பயிலும் மாணவர்களே மோதிக் கொண்டது அனைவரையும் அதிரச் செய்துள்ளது.
மாணவர்களுக்கு என்ன மாதிரியான வழிகளில் மதம்/சாதிய ஒழிப்பு குறித்து போதிக்கலாம்?
மாணவர்கள் சமூக அக்கறை உள்ளவர்களாக உருவாக கல்வியில் செய்யப் பட வேண்டிய மாறுதல்கள் என்னென்ன ??
எதிர்கால சந்ததிகள் மதம்/சாதிய எண்ணம் துளியும் இல்லாமல் வாழ அவர்களுக்கு போதிக்க வேண்டிய பாடங்கள் என்னென்ன?
இதெற்கெல்லாம் ஒரே விடை, பள்ளியில் முதல் நாள் சேரும்போதே குழந்தையின் ஜாதி என்ன என்ற கேள்வி கேட்டு, குழ்ந்தை மனதில் பெயருடன் ஜாதியின் அடையாளத்தையும் சேர்த்து மனதில் பதியும் படியாக ஜாதியின் பெயரை கேட்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்.
திருமணம் என்றால் கலப்பு திருமணம்தான் "
சாதி மறுப்புத் திருமணம்" பதிவுசெய படவேண்டும், அவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் கார்டு தரப்படவேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் அவர்களுக்கு ஸ்பெஷல் ரேஷன் கார்டு தரப்படவேண்டும். அவைகள் இரண்டுமடங்கு சலுகைகள் தரப்படவேண்டும். பிள்ளைகள் படிப்பில் இருந்து சிறந்த சலுகைகள் கிடைக்க வழிவகை செய்து தரப்படவேண்டும்.
சாமியை மனதில் இருந்து தூர ஏறி, மதங்கள் தான் இந்த மதம்/சாதிய எண்ணங்கள் அடிப்படை, அதுதான் ஊடுருவ வழி வகுத்து பின் பிரிவினை.....அதனால் மதங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்..இந்த சமுதாயத்தில் சாதிய எண்ணங்கள் துடைத்தெறிய சாமியை கும்புடாத.....இந்த சமுதாயத்தில் பிரிவினை (மதம் /ஜாதி) எண்ணங்கள் துடைத்தெறிய சாமியை கும்புடாத..... அவனை விட நீ சிறியவன் / பெரியவன் என்று உன் முலையை மழுங்கடித்து கொல்லோதே !!இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் புத்த அரசாங்கமும், பாலஸ்தீனத்தில் அராபியர்களை அழிக்கும் யூத இஸ்ரேலிய அரசும், இந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்க வைத்து மக்களைக் கொல்லும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் தினசரி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் கிறிஸ்துவ அமெரிக்க ராணுவமும் , குஜராத்திலும் ஒரிஸாவிலும் அகோர மான படுகொலைகளை நிகழ்த்தும் தீவிர இந்து அமைப்புகளும் பயங்கரமான தீவிரவாதிகள்தான். இது எல்லாம்
மதம் தொடர்பான படுகொலைகள்தான் .....
இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்காக வாழ்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களை சாதியத் தலைவர்களாக்கி, அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமைபடுத்தும் சில அரசியல், சமூதாய அமைப்புகளைப் போல, மாணவர்களும் நடந்துகொண்டிருப்பது நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) உடைக்க வேண்டும்...
இனிமேலும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அரசியல் சட்டத்தில் "புலிகள் " மற்றும் "தீண்டாமை" போல "மதம்/ஜாதி" ஒழிக்கப்பட்டுவிட்டது என்றநிலையை ஏற்படுத்தி கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.
ஜாதி கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் ..." மதம்/ஜாதி போடா - சட்டம் ?? "
இவை பிறவி மதம்/சாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக உணர வேண்டும்..நம்மிடையே பல சாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் மதம்/சாதிகள் கிடையாது.
இந்த மதம்/சாதிய அசிங்கத்தை சிந்தனையாலும், ஒருமித்த செயலாலும் துடைத்தெறிய முதலில், நம் மனதில் உள்ள மதம்/ஜாதி அழுக்கை அப்புறப்படுத்த வேண்டுகிறேன்......நன்றி...