Wednesday, December 17, 2008

அழகிரி பெயர் "தினகரன்" வழ‌க்‌கி‌‌ல் இல்லையாம் !?

கட‌ந்த 2007ஆ‌ம் ஆ‌ண்டு மே மாத‌ம் 9 ஆ‌ம் தே‌தி தினகர‌ன் ப‌த்‌தி‌ரிகை‌யி‌ல் வெ‌ளியான கரு‌த்து‌க் க‌ணி‌ப்பை‌த் தொட‌ர்‌ந்து, ஆ‌த்‌திரமடை‌ந்த ஒரு கு‌ம்ப‌ல் அ‌ப்ப‌த்‌தி‌ரிகை‌யி‌‌ன் மதுரை அலுவலக‌து‌க்கு‌ள் புகு‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்‌தியதோடு, ‌தீ வை‌த்து‌ம் கொளு‌த்‌தின‌ர்.இ‌ந்த தா‌க்குத‌லி‌ல் ‌அ‌ந்த அலுவலக‌த்‌தி‌ல் ப‌ணிபு‌ரி‌ந்து வ‌ந்த கோ‌‌பிநா‌த், ‌வினோ‌த்குமா‌ர், மு‌த்துராம‌லி‌ங்க‌ம் ஆ‌கிய 3 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள்.

இது தொட‌ர்பாக தா‌க்குத‌லி‌ல் பலியான கோபிநாத் எ‌ன்பவ‌ரி‌ன் தாயார் திலகவள்ளி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌த் தொடர்ந்தார். அ‌தி‌ல் மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதன் உள்ளிட்ட 10 பேரை சேர்க்க வேண்டும் என்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

மதுரை '‌தினகர‌ன்' ப‌த்‌தி‌ரிகை அலுவலக‌ம் தா‌க்க‌ப்‌ப‌ட்டது தொட‌ர்பாக, ம‌‌த்‌திய புலனா‌ய்வு‌க் கழக‌ (‌சி.‌பி.ஐ.) ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் மு.க. அழ‌கி‌‌ரி பெயரை கு‌ற்றவா‌ளிக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் சே‌ர்‌க்க‌க் கோ‌ரியு‌ம் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட மனுவை செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் இ‌ன்று த‌ள்ளுபடி செ‌ய்தது.மனுவை‌ த‌ள்ளுபடி ச‌ெ‌ய்து நீ‌திப‌தி கே. மோக‌ன் ரா‌ம் கூறுகை‌யி‌ல், இ‌ந்த மனு ‌இ‌ங்கு விசாரணை‌க்கு ஏ‌ற்புடையது அ‌ல்ல எ‌ன்று‌ம் இ‌ந்த வழ‌க்கு‌த் தொட‌ர்பாக மனுதார‌ர் உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ மதுரை ‌கிளையை அணுக வே‌ண்டு‌ம் எ‌‌ன்று‌ம் உ‌த்தரவ‌ி‌ட்டா‌ர்.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல், ம‌த்‌திய புலனா‌ய்வு‌க் கழக ‌சிற‌ப்பு வழ‌க்க‌றிஞ‌ர் ச‌ந்‌‌திரசேகர‌ன் ஆஜரா‌கி வா‌திடுகை‌யி‌ல், இ‌ந்த வழ‌க்‌கி‌‌ல் அழ‌கி‌ரி‌யி‌ன் பெயரை‌‌ச் சே‌ர்‌க்கவு‌ம், அவரு‌க்கு எ‌திராக கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரிகை தா‌க்க‌ல் செ‌ய்யவு‌ம் எ‌ந்த‌‌வித முகா‌ந்‌திரமு‌ம் இ‌ல்லை எ‌ன்று கூ‌றினா‌ர்.

என்னடா இது ? நடப்பது என்ன ?

Sunday, December 14, 2008

ஸ்வீட் எடு கொண்டாடு !

நல்லது நடந்தால் ... எல்லோருக்கும் மகிழ்ச்சிதான் ..... இன்று நல்ல நாள் .... மானிட இனத்தின் துரோகி அமெரிக்க அதிபர் புஷ ஊடகவியாளர்களை சந்தித்துப் பேசினார்.அங்கு அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில்,ஈராக் ஊடகவியாளர் ஒருவர் பாதணியால் தாக்கினார். அதிபர் செருப்படியில் இருந்து லாவகமாக தப்பினர் இதில் இராக் அதிபருக்கு வருத்தம் தான் ! அடுத்த முறை சரியா செருப்பால் அடிக்க இராக் மக்கள் சார்பில் உறுதி எடுத்து கொண்டார்..

அமெரிக்க அதிபர் புஷ் "அந்த பாதணி சைஸ் பத்து.".... என்று உலகமக்களுக்கு பெருமையுடன் தெரிவித்துக் கொண்டார் !

இராக் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறார்கள் ....
ஸ்வீட் எடு கொண்டாடு !
இதுக்குதான் நம் கோவில்களில்
பாதணி அணித்து செல்ல
அனுமதி இல்லையோ ?


பத்திரிக்கையாளர்களை
தீவிர சோதனை செய்தது
ஆயுதம் வைத்திருக்கிறீர்களா என்று
ஆனால்,
அதை விட அதிக வலிமையுடைய
எழுதுகோளையும்,
நாவையும்,
செருப்பையும்
அல்லவா உங்களுடன்
எடுத்துச் சென்றிருக்கிறீர்கள்! ( நன்றி : தமிழச்சி )
என்ஜாய்... பேபி.....

Tuesday, December 2, 2008

தமிழகத்தில் காங்கிரஸ் துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது

(இடுக்கண் வருங்கால் நகுக! அதனைஅடுத்தூர்வது

அஃது ஒப்பது இல் .

வாழ்வில் துன்பங்கள் நிகழும் தருணங்களில் அத்துன்பத்தை பார்த்து நகைத்துவிடு !! எதிர்த்து வரும் துன்பத்தை தொலைத்து விட அதைவிட சிறந்த வழியொன்றுமில்லை. - திருவள்ளுவர்.)

தமிழகத்தில் காங்கிரஸ் துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது முதலில் குரல் கொடுத்தது காங்கிரஸ்தான் (அடங்க ?! ). வறுமை ஒழிப்புக்காக, மருத்துவ வசதிக்காக, ஏழைகளின் உயர்கல்விக்கு என பல திட்டங்கள் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. ( எடுத்து .... சொல்லுங்க !)


இன்று இந்தியாவில் 72 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர் (யாரு அது ஸ்டாலின் & விஜயகாந்த் ?). தியாக ( உழல் ) வரலாற்று பின்னணி கொண்ட குடும்பத்து இளைஞரான ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் (?) . தமிழகத்தில் காங்கிரஸ் மிகுந்த வலிமையுடன் உள்ளது ( நீங்க சொல்லித்தான் மக்களுக்கு தெரியுணும் ). தமிழக ஆட்சியில் பங்கு கேட்டால் நாளையே நாங்கள் ஆட்சியில் இருப்போம் ( கருணாநிதிக்கு நல்ல ஆப்பு !).

தமிழகத்தில் காங்கிரசின் துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது ( ஆமாம் ....தெரியாது பாருங்க ??)

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசும் எந்த கட்சிகளுடனும் எங்களுக்கு உறவு கிடையாது ( அப்போ திருமா, ராமதாசு ?) .

விரைவில் மத்திய அரசு குழு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை பார்வையிட வருகிறது என்றார் ( அப்போ நீ என்ன தான் செய்யுற ? ! ).

Tuesday, November 18, 2008

தொழில்தான் முக்கியம் அதற்காவது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்

மின்வெட்டால் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க முடியாத சூழ்நிலை தொடர்கிறது.

கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பஞ்சாலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி அதனால் சுமார் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், சம்பள இழப்பும் ஏற்பட்டு இருக்கிறது.

விவசாயமும், தொழிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மக்களுக்கு தொழில்தான் முக்கியம் அதற்காவது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். அதாவது கமர்ஷியல் மின் இணைப்புகளுக்கு மட்டும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்.

அப்படிசெய்யவில்லை என்றால் பல குடும்பங்கள் சிரமப்படும் . தொழில்கள் நடத்தமுடியாமல் நோடித்துபோகும், இதனால் மக்கள் மிகவும் துனப்படுவார்கள். வேலை இழப்பும், சம்பள இழப்பும் ஏற்படும்.

தமிழக அரசு இதற்கு மின்துறை சார்ந்த நிபுணர்களையும் அழைத்து ஆலோசனை பெற வேண்டும்.

மக்கள் நலனை மனதில் கொண்டு, அவற்றை ஏற்று போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் கருணாநிதி தீர்வுகாண வேண்டும்.





Saturday, November 15, 2008

ஞாபகம் வருமென...

இலக்கை நோக்கியே
வாழ்க்கை பயணங்கள்!
பயணத்திற்குப்பணம்
வேண்டுமே!...பணம் மட்டும்பயணத்தை
மாற்றுவதா?
நோக்கமே இலக்கை நோக்கி...
இலக்கையும்!
பயணத்தையும்!
பணத்தையும்!
சரி வர ஒன்று சேர்த்தோம்...

நேரெதிரான
ஒவ்வொன்றையும் இணைப்பதே
இலக்காகி...
எங்கோ ஆரம்பித்து! இன்று எங்கோ...
என்றாவது ஒரு நாள்
இலக்கிற்கு ஞாபகம் வருமென...
இலக்கோடு காத்திருக்கிறேன்...
இலக்கில்லாமல்

-- அய்யா.புவன் (தமிழ் முரசு - சிங்கப்பூர்)

Friday, November 14, 2008

கருணாநிதியும் காமெடியும்

மச்சான் நீ கேளேன் ?

மச்சி நீ கேளேன் ?

நீ கேளேன் ?

நீயாவது கேளேன் ?

அட ஆற்காடு நீயாவது கேளேன் ?


சரி வழக்கம்போல நானே சொல்லுறேன் என்ன கேகுணும்னு ....

நீங்க ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவும், வைகோவும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இரு சாராரையும் தூண்டிவிட்டு சண்டைப் போட வைத்திருப்பார்களோ ?

வழக்கம்போல நானே பதில் சொல்றேன் :

இப்பிரச்சனை தொடர்பாக திமுக செயற்குழு கூட்டத்திலும், அனைத்துக் கட்சி கூட்டத்திலும் முடிவு செய்யப்படும் இரு தரப்பினரின் (விடுதலைப் புலிகள், இலங்கை அரசு) நிலை தெரியாமல், ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. அதனால்தான் இலங்கைப் பிரச்சினை பற்றி பேசும்போதோ, நிலை எடுக்கும்போதோ முரண்பட்ட கருத்துகள் எதிரொலிக்கின்றன. எனவே இரு தரப்பினரும் இன்று ஈடுபட்டுள்ள சண்டை ஒத்திவைக்கப்பட்டு - நடுநிலை நாடுகளுடன் இந்தியாவும் ஒப்புக்கொள்ளக்கூடியதான சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு - அதன் இறுதிக் கட்டமாக நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது என் கருத்து ( ஆகா இப்போதைக்கு தப்பிச்சோம்டா சாமீ ....."இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புது?"')

ஆற்காடு : முரசொலில வரணும் ஓகே?


காவல்துறை முதல்-அமைச்சரின் பொறுப்பிலே இருப்பதால் - சமீபகாலத்தில் காவல் துறை மீது குற்றச்சாட்டுகள் அதிகமாகச் சொல்லப்படுகிறதே?

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.?? !! காவல்துறையினர் உள்ளே நுழைந்து சமாதானம் செய்திருந்தால், நீங்கள் உங்கள் பத்திரிகையில் ? ( பத்திரிகை செய்தி தான் முக்கியம்?? அயோடா ! அடிபட்டவன் கிடையாது !! சட்டம் ஒழுங்கு கிடையாது !! ) என்ன போடுவீர்கள்? சட்டக் கல்லூரிக்குள் காவலர் நுழைந்து தடியடி நடத்தினர் என்று போடுவீர்கள்.

தமிழ்நாட்டில் இரண்டு இடைத்தேர்தல் வரபோகிறது. அதிலே தி.மு.க., தோழமைக் கட்சிகள் போட்டியிடுமா?

தேர்தல் வரட்டும், வந்தபிறகு பேசுவோம். ( அடடா !!)

பாராளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க.தயாராகி வருகிறதா?
எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் வருகிறோம். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவே தயாராக வந்திருக்கிறேன் அல்லவா?

பா.ம.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே மீண்டும் உறவு வர வாய்ப்பு இருக்கிறதா?
எதுவும் நடக்கலாம். ( ராமதாஸ் உன் பையனுக்கு பெரிய மந்திரி பதவி வாங்கி தந்ததல்லாம் மறந்துடாத !! )

தமிழ் நாட்டின் கோரமுகம்

தற்போது தமிழகத்தையை தலைக்குனிவில் ஆழ்த்தியிருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்களின் தாக்குதல்கள் பொதுமக்கள் கண்ணெதிரிலேயே நடை பெற்றுள்ளது. காவல்துறையினர் கல்லூரிக்கு உள்ளே நுழைய கல்லூரி முதல்வர் அனுமதி தராததால் காவலர்களும் வேடிக்கை பார்த்தனராம் ? என்ன கொடுமை சார் இது ?

சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பதால் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். மீறி நடவடிக்கை எடுத்தால் அரசியல் நெருக்குதல்கள், மிரட்டல் என வருவதால் போலீஸார், சட்டக் கல்லூரி மாணவர்கள் விவகாரத்தில் தலையிடுவதே இல்லை என்பது பொதுவான ஒரு குற்றச்சாட்டு.

அதைவிட அதிர்ச்சியான தகவல் சட்டக் கல்லூரி மாணவர்களின் இந்த மோதல் அவர்களுக்கிடையே பல நாட்களாகப் புகைந்து கொண்டிருந்த ஜாதி ரீதியிலான பகையால் ஏற்பட்டது என்பதே. தமிழக கல்லூரிகளில் ஜாதி ரீதியான மோதல்கள் நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது.

மாணவர் மனதில் சாதிய உணர்வு இருப்பதே வேதனையான தகவல் என்றால் , படித்த மனங்களில் கூட சாதிய எண்ணங்கள் ஊடுருவ என்ன காரணம்?

படித்தவர்கள் மத்தியிலும் தலை தூக்கும் இந்த மதம் /சாதி வெறியை ஒழிக்க என்ன வழி?

படிக்காத பாமரர்கள் சாதிப் பிரச்சினைகளுக்காக தங்களுக்குள் மோதிக் கொள்ளும் போது இதற்கெல்லாம் காரணம் கல்வியறிவு இல்லாததே, மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்று விட்டால் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாது என்று பலரும் நம்பி வந்த சூழலில் சட்டம் பயிலும் மாணவர்களே மோதிக் கொண்டது அனைவரையும் அதிரச் செய்துள்ளது.

மாணவர்களுக்கு என்ன மாதிரியான வழிகளில் மதம்/சாதிய ஒழிப்பு குறித்து போதிக்கலாம்?

மாணவர்கள் சமூக அக்கறை உள்ளவர்களாக உருவாக கல்வியில் செய்யப் பட வேண்டிய மாறுதல்கள் என்னென்ன ??

எதிர்கால சந்ததிகள் மதம்/சாதிய எண்ணம் துளியும் இல்லாமல் வாழ அவர்களுக்கு போதிக்க வேண்டிய பாடங்கள் என்னென்ன?

இதெற்கெல்லாம் ஒரே விடை, பள்ளியில் முதல் நாள் சேரும்போதே குழந்தையின் ஜாதி என்ன என்ற கேள்வி கேட்டு, குழ்ந்தை மனதில் பெயருடன் ஜாதியின் அடையாளத்தையும் சேர்த்து மனதில் பதியும் படியாக ஜாதியின் பெயரை கேட்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்.

திருமணம் என்றால் கலப்பு திருமணம்தான் "சாதி மறுப்புத் திருமணம்" பதிவுசெய படவேண்டும், அவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் கார்டு தரப்படவேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் அவர்களுக்கு ஸ்பெஷல் ரேஷன் கார்டு தரப்படவேண்டும். அவைகள் இரண்டுமடங்கு சலுகைகள் தரப்படவேண்டும். பிள்ளைகள் படிப்பில் இருந்து சிறந்த சலுகைகள் கிடைக்க வழிவகை செய்து தரப்படவேண்டும்.

சாமியை மனதில் இருந்து தூர ஏறி,
மதங்கள் தான் இந்த மதம்/சாதிய எண்ணங்கள் அடிப்படை,
அதுதான் ஊடுருவ வழி வகுத்து பின் பிரிவினை.....
அதனால் மதங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்..
இந்த சமுதாயத்தில் சாதிய எண்ணங்கள் துடைத்தெறிய சாமியை கும்புடாத.....
இந்த சமுதாயத்தில் பிரிவினை (மதம் /ஜாதி) எண்ணங்கள் துடைத்தெறிய சாமியை கும்புடாத.....
அவனை விட நீ சிறியவன் / பெரியவன் என்று உன் முலையை மழுங்கடித்து கொல்லோதே !!

இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் புத்த அரசாங்கமும், பாலஸ்தீனத்தில் அராபியர்களை அழிக்கும் யூத இஸ்ரேலிய அரசும், இந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்க வைத்து மக்களைக் கொல்லும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் தினசரி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் கிறிஸ்துவ அமெரிக்க ராணுவமும் , குஜராத்திலும் ஒரிஸாவிலும் அகோர மான படுகொலைகளை நிகழ்த்தும் தீவிர இந்து அமைப்புகளும் பயங்கரமான தீவிரவாதிகள்தான். இது எல்லாம் மதம் தொடர்பான படுகொலைகள்தான் .....

இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்காக வாழ்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களை சாதியத் தலைவர்களாக்கி, அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமைபடுத்தும் சில அரசியல், சமூதாய அமைப்புகளைப் போல, மாணவர்களும் நடந்துகொண்டிருப்பது நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.

கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) உடைக்க வேண்டும்...

இனிமேலும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அரசியல் சட்டத்தில் "புலிகள் " மற்றும் "தீண்டாமை" போல "மதம்/ஜாதி" ஒழிக்கப்பட்டுவிட்டது என்றநிலையை ஏற்படுத்தி கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.
ஜாதி கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் ..." மதம்/ஜாதி போடா - சட்டம் ?? "

இவை பிறவி மதம்/சாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக உணர வேண்டும்..நம்மிடையே பல சாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் மதம்/சாதிகள் கிடையாது.

இந்த மதம்/சாதிய அசிங்கத்தை சிந்தனையாலும், ஒருமித்த செயலாலும் துடைத்தெறிய முதலில், நம் மனதில் உள்ள மதம்/ஜாதி அழுக்கை அப்புறப்படுத்த வேண்டுகிறேன்......நன்றி...



Thursday, November 13, 2008

இந்தியர்கள் கணக்கில் புலி

வெளிநாடு செல்லும் பெரும்பாலானவர்களுக்கு ஓர் அனுபவம் இருக்கும். "இந்தியர்கள் கணக்கில் புலி" என்பார்கள். இதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால், இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஒரு வித்தியாசம் புலப்படும். மற்ற நாடுகளில் பள்ளிக்குச் சென்று முறையாகக் கற்றால்தான் கணிதம் பயிலமுடியும். ஆனால் இந்தியாவில் சில நடைமுறைப் பயிற்சிகளாலேயே பாமரர்கள்கூடக் கணக்கில் புலிகளாக உலா வருவதைக் காண்கிறோம். உதாரணமாக, அமெரிக்காவிலோ ஜப்பானிலோ சினாவிலோ மெக்டொனால்ட்ஸ் அல்லது ஏதாவதொரு கடையில் சென்று பொருள் வாங்கும்போது, பில் போடும் இயந்திரம் என்ன சொல்கிறதோ அவ்வளவு பணத்தைத்தான் கேட்பார்கள். அவ்வியந்திரம் தவறாகச் சொன்னாலும் அதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. அதுவும் ஒவ்வொரு வாடிக்கையாளராகத்தான் அவர்களால் கவனிக்க முடியும்.

நம் ஊரில் மளிகைக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சி ஒரே ஆளாய் ஒரே சமயத்தில் பத்துப்பேரைக் கவனித்துக்கொண்டு, கடைப்பையன்களுக்கு வேலையையும் சொல்லிக் கொண்டிருப்பார். இடையிடையில் 'என்னண்ணே! அரிசி வாங்கி இருபது நாட்கள் ஆகிடுச்சி! இன்னும் தீரலையா? வெளியூர் ஏதாவது போய்விட்டீர்களா?' என்று ஒவ்வொரு வாடிக்கையாளரைப் பற்றியும் தனித்தனியாகவும் கணித்துக் கொண்டிருப்பார். இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற கேள்விக்கு இந்நூல் விடையளித்தது. கணக்கு இந்தியர்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது.

ரசித்தது


'எத்தனை புயல்களை நீ சமாளித்துக் கடந்தாய் என்பது முக்கியமல்ல . எத்தனை கப்பலை ஒழுங்காகக் கரை செர்த்தாயா என்பதே முக்கியம்!" - வில்லியம் மீக்லி

புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்

மனிதன் மனம் வைத்தால் கல்லும் கவிபாடும்..
கன இரும்பும் நடனமாடும்- பொன்மொழி


மகிழ்வை கொண்டாடுவோம்!....

மகிழ்ச்சியாக இருக்க பெரிய காரணம் தேவையில்லை..... இயற்க்கையை பார்த்து, அதன் அழகை பார்த்து மகிழலாம். இன்று கிடைக்கும் சிறு வெற்றியும் மகிழ்ச்சிதானே, இதை இந்த சந்தர்ப்பத்தை விட்டால் கிடைக்காமல் போகலாம் எனவே இதையும் மகிழ்வாக ஏற்றுகொள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சி மற்றவரையும் மகிழப்படுத்தலாம்...ஆக ..மகிழ்வை கொண்டாடுவோம்!....

என் மனைவிக்காக ......:)

விழி

விழியின்றி வழியில்லை

வழியின்றி பலர்.

விழிப்போம்

வழிவகுப்போம்

கண்தானத்திற்கு.

- அ. தாட்சாயணி ( தமிழ் முரசு, சிங்கப்பூர் )

சிங்கப்பூர் ஆறு

சென்னையின் கூவத்தை விடக்குமட்டுகின்ற நாற்றத்துடன்,இருந்ததெல்லாம் பழங்கதை.


கொட்டிவிட்ட குப்பைகளும்விழிப்புணர்வைத் தொலைத்தஅடையாளங்களும்படகுகளுக்குப் போட்டியாய்ஆற்றின் பரப்பை அன்றுஆக்கிரமித்திருந்தது,அறிவிப்பு செய்தது அசிங்கத்தை.


மரங்கள் இருந்தும்,உதிர்ந்து விழும்இலைகள் கூட மிதக்காதது,இப்போது சொல்லிவிடும் சுத்தத்தை.


மழைத் தண்ணீரும்,நீர்மட்டம் உயரும் போதுநிலத்திற்குள் வரும்கடல் தண்ணீருமாய்ஓடுகின்ற ஆறு,

நினைத்தால் எதையும்சாதிக்கலாம் என்பதற்குநிறைவான உதாரணமாய்நேரில் காட்சியளிக்கிறது.

- சித. அருணாசலம் ( தமிழ் முரசு, சிங்கப்பூர் )

படித்ததில் பிடித்தது

வேண்டுதல் !!

திரைப்படம் எடுக்கணும்

தொலைகாட்சி

தொடாங்கனும்

பத்திரிகை நடத்தணும்,

பாராளுமன்றம் போகணும்

மந்திரியாகணும்

மாநிலம் ஆளணும்

கடவுளே

என்னை அடுத்த

ஜென்மத்திலாவது

முதல்வரின் பேரனாக்கு!

திரு. ஏ.பி.வள்ளியப்பன் குமுதத்தில் எழுதிய கவிதை.....

மகள் ...

எங்களால் எழுத முடிந்த சிறிய கவிதை அவளின் பெயர்....

Wednesday, November 12, 2008

எங்கே ஏங்கள் ஏரிகளும் குளங்களும்?

"தமிழகம் உட்பட 19 மாநிலங்களில் 200 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அசுத்தமாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் பயன்படுத்தும் நீரில் உப்புத்தன்மை, இரும்பு, புளோரைட், நச்சுத்தன்மை ஆகியவை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கும். நீரில் அதிக அளவிலான புளோரைட் பற்களையும் எலும்புகளையும் பாதிக்கும். நச்சுத்தன்மை அதிகம் உள்ள நீரைக் குடித்தால் தோல் நோய்களும் தோல் புற்று நோயும் ஏற்படும். மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது."

Water Tablet என்றழைக்கப்படும் நிலத்தடி நீர்த்திட்டுக்கள் தனித்தனியே தீவாக உருவானவை அல்ல. பூமியின் அடியாழத்தில் அவை ஒரே தளமாக இணைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் அற்புதங்களுள் இதுவுமொன்று. ஆக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் கழிவுநீரால் மாசுபடுத்தப்படும் நீர் இந்த இணைப்பால் மற்ற பகுதிகளுக்கும் எளிதாகப் பரவுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியின் பல்வேறு இடங்களிலும் சகட்டு மேனிக்கு மாசுபாடு நிகழும்போது ஒட்டு மொத்த நீர்த்திட்டும் பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

நிலத்தடி நீர் எதனால் மாசுபடுகிறது?

- விரிவடைந்துவரும் நகரங்களின் தேவைக்கு ஏற்றவாறு அதனைச் சுற்றிய நீர் ஆதாரங்களைப் பெருக்கிக்கொள்ளத் தவறியது

- அப்படித் தவறியதோடு மட்டுமன்றி இருக்கும் பண்டைய நீர் ஆதாரங்களான ஏரிகளையும் குளங்களையும்கூட பிளாட் போட்டுக் கூறுபோட்டுக் கூவி விற்றது

- அல்லது ஏரி / குளங்களின் நீரை சுகாதாரமான முறையில் பாதுகாக்கத் தவறியது / சுழற்சி முறையில் தூர் வாராமல் அவற்றை சீரழிய விட்டது

- மழைநீர் அருகில் உள்ள குளம் குட்டைகளில் சேருவதற்கான கால்வாய்களையோ வாய்க்கால்களையோ அமைக்காமல் இருக்கும் நீர்வழிகளையும் அடைத்து விட்டது

- தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் சரியான முறையில் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமல் வெளியேற்றப்படுகின்றனவா என்பதை அறவே அலட்சியப்படுத்தியது (அல்லது உரிய லஞ்சப் பணத்தை வாங்கிக்கொண்டு சுற்றுச் சூழல் மாசுபாடுச் சான்றிதழ் வழங்கியது)
பாருங்கள் இது ராஜா அண்ணாமலைபுராம் கடலில் கலக்கும் காட்சி. தூரத்தில் தெரிவது பரங்கிமலை.நம்பமுடியவில்லையல்லவா? இது ஏதோ கற்பனை ஓவியமென்று நினைத்துவிடாதீர்கள். அன்று தெரிந்த நிஜக்காட்சி இது. அடையாறு என்பது உண்மையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆறு என்பது உங்களில் எவருக்காவது தெரியுமா? சென்னை முகப்பேரில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தியாகராய நகர் பேருந்து நிறுத்தம் இன்று அமைந்திருக்கும் இடத்தில் ஒரு ஏரி இருந்தது. அட, சாக்கடைச் சமுத்திரமாக விளங்கும் கூவமும் கூட ஒரு காலத்தில் ஆறு.!

நமக்குத் தெரிந்து சென்னை வில்லிவாக்கத்தில் இருபது இருபத்தைந்து வருடங்களுக்குமுன் ஒரு பிரம்மாண்டமான ஏரி இருந்தது. நிஜமாகவே மிகப்பெரிய ஏரி. நல்ல மழை பெய்யும் நாட்களில் அக்கரைக்கு இக்கரை நீர் ததும்பிக்கொண்டிருக்கும். பின் ஒரு காலத்தில் அதிகாரிகளின் தயவால் ஒரு ஓரத்தில் வீட்டுப்பகுதிகள் முளைத்தன. இன்று அந்த ஏரி எங்கிருந்தது என்று வில்லிவாக்கம்வாசிகளுக்கே தெரியாது. அந்த அளவிற்கு அப்பகுதியில் வீடுகள் முளைத்துவிட்டன

அமைச்சர்களும் அதிகாரிகளும் எதையெதையோ திறந்து வைக்கிறார்களே - எவராவது ஒருவர் கடந்த 70 வருடங்களில் ஒரு ஏரியைக் கட்டுவித்தார் - ஒரு குளத்தைத் வெட்டினார் - குறைந்தபட்சம் ஒரு வாய்க்காலைத் தூர் வாரினார் என்று படித்திருக்கிறோமா?

பொருளாதாரத் தேடலில் மனிதநேயத்தையும் சமூகசிந்தனைகளையும் தொலைத்துவிட்டு நிற்கிறோம். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ஒரேயொரு பிரதமரும் ஒரேயொரு பொதுப்பணித்துறை அமைச்சரும் ஒரேயொரு மேயரும் எத்தனை பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள்?

நம்மை அடிமை செய்து ஆண்ட வெள்ளையர்கள்கூடச் செய்யாத அத்தனை அட்டுழியங்களையும் கடந்த அறுபது எழுபது வருடங்களில் நாம் செய்து முடித்துவிட்டோம். பணத்தாசை மற்றும் பேராசை பிடித்த அரக்கர்களாக மாறி இயற்கையன்னையின் பாலை மட்டுமல்ல - மார்பகங்களையே கடித்து இரத்தம் உறிஞ்சிக் குடிக்கத் துவங்கிவிட்டோம். "தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு" என்று முடங்கிவிட்டோம். சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் எவனோ பார்த்துக்கொள்வான் - உனக்கும் எனக்கும் என்ன ஆயிற்று? மனிதகுலத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் யாராவது ஒரு சூப்பர் ஹீரோ வந்து தீர்த்துவைப்பான் என்று சினிமாப் பார்த்து மூளையை மழுங்கடித்துக் கொள் .....நண்பா .....



Thursday, November 6, 2008

எம்.பிக்கள் ராஜினாமா - கருணாநிதி உங்கள் பதில் என்ன ?

கருணாநிதி இதோ பாருங்கள் மும்பையில், வடஇந்தியர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, ஐக்கிய ஜனதாதள கட்சி எம்.பிக்கள் 5 பேர் இன்று ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதால், ஐக்கிய ஜனதாதள எம்.பிக்கள் இன்று, பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியிடம ராஜினாமா கடிதங்களை அளிக்க உள்ளனர்.



இலங்கையில், அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்து பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். உங்கள் அரசு இதே பொருட்படுத்தாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் அதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் அல்லது தமிழ் நாட்டின் அனைத்து எம்.பிக்களூம் ராஜினாமா செய்யவேண்டும் .

நெல்லையி்ல் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாலைமறியல், கல்வீச்சு, பஸ்சுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்களால் பல கிராமங்களுக்கு நான்காவது நாளாக பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் பஸ் போக்குவரத்து இல்லாமல் துண்டிக்கப்பட்டது.இதனால் கிராம மக்கள் லோடு ஆட்டோ, வேன் உள்ளிடடவைகளில் பயணம் செய்தனர். இதனால் பள்ளி, மாணவ, மாணவிகள் பல மைல் தூரம் நடந்தே பள்ளிக்கு சென்றனர். நெல்லை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் 5 பஸ்களாக சேர்த்து இயக்கப்பட்டன....

யார் இந்த டாக்டர் கிருஷ்ணசாமி ?.. என்ன வேண்டும் இவருக்கு ? சத்தியமா இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றாமல் தூங்கமாட்டர்கள் போல ?

Wednesday, November 5, 2008

“ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை"

“ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் ஒரு குறிப்பிட்ட கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. ஆனால் ராஜீவ் எனும் இந்த ஆயுதம் மட்டும் 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் முனை மழுங்காமல் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாய்ந்து கொண்டே இருக்கிறது. காரணம், அதனை யாரும் எப்போதும் திருப்பித் தாக்கியதில்லை என்பதுதான்.


ராஜீவ் கொலை குறித்த பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், “அதனை மறந்து விடக்கூடாதா, மன்னித்து விடக்கூடாதா” என்று மன்றாடுகிறார்கள் பல தமிழுணர்வாளர்கள் . ஆனால் இந்த இக்கும்பலிடம் இதுவரை பலிக்கவில்லை.


ஈழப் பிரச்சினைக்காக தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளும், சினிமா உலகினரும் போராடிக்கொண்டிருப்பதைப் போல தோற்றம் கொண்டிருக்கும் சூழ்நிலையைத்தான் ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. இன்னொரு நாட்டில் மத்திய அரசு இதற்கு மேல் தலையிட முடியாது என்று கைவிரித்து விட்ட கருணாநிதி, ஈழத்தின் உள்நாட்டுப் பிரச்னையில் ராஜீவ்காந்தி தலையிட்டதால்தான் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நானூறு தமிழக மீனவர்கள் சுடப்பட்டார்களே... அது எந்த நாட்டுப் பிரச்னை என்கிறார் கருணாநிதி. குறைந்தபட்சம் கருத்துச் சொல்லியிருக்க வேண்டியதுதானே! ஈராக்கில் அமெரிக்கா தலையிட்டபோது கருணாநிதி கேட்டிருக்கலாமே


கருணாநிதி தற்போது கையேந்தி வசூலித்து வரும் வேளையில் ஈழத்திற்கு நிவாரணத்தை விட போர் நிறுத்தமும், அரசியல் ரீதியான ஆதரவுமே தேவை.


தமிழகத்து மக்கள் ஈழத்தின் துயரில் பங்கெடுக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். இந்த உதவியை தமிழ் மக்கள் செய்யமுடியுமா ? முடியாவிட்டால் உதவுதற்கு வேறு யார் இருக்கிறார்கள் ?


ஆனால் தமிழ்நாட்டில் நடிகர்களும், கருணாநிதியும் ஈழத்தின் அவலத்தை வைத்து நாடகம் தான் நடத்துகிறார்கள்.


“மன்மோகன் அரசே, உன் டாடாவும், அம்பானியும் கொள்ளையடிக்க எங்கள் ஈழத் தமிழர் சாக வேண்டுமா ? என்று எண்ணித்தான் வேதனைப்பட வேண்டியிருக்கிறது.


``தமிழக மக்களிடமே ஓட்டு வாங்கி, பதவியில் அமர்ந்துகொண்டு அந்த மக்களுக்கே துரோகம் செய்கிறார்கள். இனத்திற்கும், மொழிக்கும் துரோகியாக நிற்கிறார்கள்.



Tuesday, November 4, 2008

கேவலமான முதுகெலும்பற்ற புழு கருணாநிதி

கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்த் தாக்குதலைச் சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூரப் போரை நடத்தி வருகிறது, குண்டு வீச்சுத் தாக்குதலால் பிணமாகிக் கிடக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள், இரத்தக் கறையுடன் வீதியில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், குவியல் குவியலாகப் பிணங்கள், படுகாயமடைந்து சிகிச்சை பெற வசதியின்றித் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள், வீடிழந்துபடுகாயமடைந்து சொந்த மண்ணிலே அகதிகளாகிக் காடுகளில் ஒளிந்து வாழும் அவலத்தில் தமிழ் மக்கள், உணவோ மருத்துவமோ கிடைக்காமல் பட்டினியாலும் நோயினாலும் பரிதவிக்கும் தாய்மார்கள், குழந்தைகள் என ஈழத்தமிழர்கள் மாளாத் துயரில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்த அநீதியான போருக்கு எவ்வித சர்வதேசத் தடையுமில்லை

இவை குறித்த குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட பின்னரும், வாயே திறக்காமல் மவுனம் சாதித்தது மன்மோகன் சிங் அரசு. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இப்பிரச்சினையை எழுப்பிய பிறகும் கருணாநிதி, இது குறித்து வாய் திறக்கவில்லை. ஜெயலலிதா, மன்மோகன் சிங்கையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்ட பிறகுதான் வேறுவழியின்றி கருணாநிதி வாய் திறந்தார்.

மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், ஈழத் தமிழர் துயரம் பற்றி அவர் பரிவுடன் கேட்டதாகவும் கூறிய கருணாநிதி, ஈழத் தமிழர் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்பக் கோரினார். இலங்கைத் தூதரை அழைத்துப் பேசவேண்டும், அரசியல் தீர்வு காண வலியுறுத்த வேண்டும் எனப் பொதுக் கூட்டம் நடத்திக் கோரிக்கை வைத்தார். மைய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி செய்வதை கருணாநிதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகச் சாடி, அவர் ஏன் பதவி விலகவில்லை என்று ஜெயலலிதா அம்பலப்படுத்தியதும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஈழத் தமிழர் மீதான போர்த் தாக்குதலை மைய அரசு தடுத்து நிறுத்த முயற்சிக்காவிடில் தமிழக எம்.பி.க்கள் பதவி விலகுவார்கள் என்று மிரட்டல் நாடகமாடினார்.

அதேநேரத்தில் போர் தொடரும் என்று வெளிப்படையாக இலங்கை அரசு அறிவித்தபிறகும், மைய அரசை நிர்பந்திக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மைய அரசுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாத வகையில் மனித சங்கிலி போராட்டம் நடத்திய கருணாநிதி, மைய அரசைக் கவிழ்க்கும் நோக்கமில்லை; மைய அரசை அவசரப்பட்டு யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

பதவிக்காகவும் சொத்துசுகங்களுக்காகவும் இதைவிடக் கேவலமான முதுகெலும்பற்ற புழுவாய் யாரும் நடந்து கொள்ள முடியாது.

அமெரிக்காவின் அதிபராகும் முதல் கருப்பர் இனத் தலைவர்


முதல் கருப்பர் இன அதிபராக வெற்றி பெற்றுள்ள ஒபாமாவுக்கு எனது வாழ்த்துகள்
அமெரிக்க அரசியலிலே இனம், நிறம் என்பவை இனிமேலும் ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக இருக்கப்போவதில்லை.

" எனக்கு ஒரு கனவு இருக்கிறது' என்று அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) 45 வருடங்களுக்கு முன்னர் அதே தினத்தில் (ஆகஸ்ட் 28) வாஷிங்டனில் நிகழ்த்திய உரை அந்த இயக்கத்தின் போராட்டங்களில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தனக்கு இருந்த கனவு பற்றி அன்று மார்ட்டின் லூதர் கிங் உரையாற்றிய போது அடுத்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் வெள்ளை மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கக் கறுப்பர் ஒருவர் வந்துவிட்டார்.
அமெரிக்கா முழுவதுமே ஒபாமாவின் வெற்றியைக் கொண்டாட ஆங்காங்கே மக்கள் கூடியுள்ளனர்.பல இடங்களில் கருப்பர் இன மக்கள் கைகளில் அமெரிக்கக் கொடியை ஏந்தியபடி மகிழ்ச்சியி்ல் கண்ணீர் வடித்தபடி நின்றுள்ளனர்.

அமெரிக்க பொருளாதாரம்

அவருக்கு மேலும் பல வேலைகள் காத்து இருக்கிறது முதலாவதாக உலக நிதிநெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சிறந்த வழியாக, அமெரிக்க அரசு விரைவில் ஒரு புதிய போரை ஆரம்பிக்க வேண்டும்!....யு கேன் கால் இட்...எ " வார் ஆன் ......................." கடந்த 8 ஆண்டுகளாக புஷ் என்ற மனித குல எதிரி செய்த லூசுத்தனமான செயல்களால் உலகம் முழுவதும் அமைதியின்மை நிலவுகின்றது. அதே போல் விவேகமில்லாத போர் முன்னெடுப்புகளாலும், பொருளாதார கொள்கைகளாலும் உலக பொருளாதாரத்தை நிலைகுலைய செய்ததிலும் முக்கிய பங்கு அவருக்கு உள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. உயரக் கூடிய எதும் ஒருகட்டத்தில் கீழே வந்தே தீரும் என்ற கோட்பாடு நடைமுறைக்கு வந்து கொண்டிருப்பது போல் உள்ளது. இந்த நிலையில் ஒபாமா அதிபராவதன் மூலம் பொருளாதாரம் மேலும் சீரழிந்தால், ஒபாமா போன்ற கறுப்பர் ஒருவர் வந்ததே இதற்கு காரணம் என அமெரிக்க மக்களிடம் விஷம பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இனி அமெரிக்க அரசியலில் மீண்டும் ஒரு கறுப்பர் அதிபராகும் வாய்ப்பு நிரந்தரமாக பறி போக வாய்ப்பு உள்ளது.

அடுத்து திரு.ஒபாமா ஈராக், ஆப்கன் போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறும் என்று அறிவித்துள்ளார். இதனால் உலகில் இருக்கும் ஆயுத வியாபாரிகளின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அந்த கொடியவர்கள் தங்களது ஆயுத வியாபாரத்திற்காக எவரையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள.

அடுத்து பிற நாடுகளில் தனது ஆளுமையை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும் .இவ்வாறு செய்தால் அமெரிக்காவுக்கு அடி வருடுவதையே தொழிலாகக் கொண்ட பல நாட்டு அரசியல் தலைவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் வாய்ப்பு ஏற்று விடும். குறிப்பாக இந்தியா போன்ற நாட்டு தலைவர்களை மேற்கத்திய வழக்கத்தின் படி நடத்த ஆள் இல்லாததால் திக்குத் தெரியாமல் திணறக் கூடும். பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்களது நாட்டின் ஜனாதிபதியாக இதுவரை விளங்கிய அமெரிக்க ஜனாதிபதி இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இது உலகிற்கு பேராபத்தாக முடியும்.

ஒபாமாவில் ஸ்லோகமே மாற்றம் என்பது தான். ஆனால் அமெரிக்க செனட் என்பதே மாற்றங்களை விரும்பாத மாமாக்களைக் கொண்டதே... இதனால் ஒபாமாவுக்கும், செனட்டுக்கும் இடையே பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. ஒரு கட்டத்தில் ஒபாமா காம்பரமைஸ் ஆகவும் வாய்ப்பு உள்ளது.

ஒபாமாவுக்கு கப்பலில் ஏற்படும் ஓட்டையை அடைக்க மட்டுமே தெரியும். ஆனால் அடித் தளமே ஓட்டையாகிப் போன கப்பலை காப்பாற்ற வழி தெரியாது. (மூழ்கும் கப்பலுக்கு கேப்டனாவதில் எந்த பயனும் இல்லை)

ஒபாமா நிறத்தால் கறுப்பரானாலும், அதை பயன்படுத்தி ஓட்டு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடாத போதும், அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் இந்த நிறவெறியை மறைமுகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் இது ஒரு கறுப்பு - வெள்ளையருக்கு இடையேயான பிரிவை மேலும் அதிகரிக்க விரும்புகின்றனர். ஒபாமாவின் வெற்றி மூலம் இந்த வெறி அதிகமாகி விடும்.

பொருளாதார அடியாளாக செயல்படும் அமெரிக்க அரசின் அணுகுமுறை இனிமேல் உலகமக்களின் நலனுக்காக மாற்றியமைக்கப்படுமா?


முற்றுப்பெறாத கேள்விகள் இன்னும் தொடர்கின்றன. ஆனால் பதிலென்னவோ ஒன்றுதான். அது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பும், அரசியலும், பொருளாதாரமும் எந்தவித மாற்றமுமில்லாமல் தொடரப்போகிறது என்பதே!

Thursday, October 16, 2008

உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால் மத்திய அமைச்சரவையில் இருந்து தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்

"இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதும், அப்பாவி இலங்கை தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ராணுவ தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் தற்போதுள்ள முக்கியமான பிரச்சனை. " : ஜெயலலிதா

எம்பி பதவிக்காலம் இன்னும் 6 மாதத்தில் முடிய உள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழலில் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடந்தால் தற்போதுள்ள எம்பிக்களின் பதவிக்காலம் 3 அல்லது 4 மாதங்களிலேயே முடிந்துவிடும்.ஆனால் எம்பிக்கள் பதவி விலகுவார்கள் என்று தீர்மானத்தி்ல சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மத்திய அமைச்சர்கள் பற்றி அதில் ஒரு வார்த்தைக் கூட இல்லை.

உண்மையிலேயே இலங்கை தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால் மத்திய அமைச்சரவையில் இருந்து திமுகவைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்.மேலும் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவையும் அனைத்து தமிழக எம்பிக்களும் திரும்ப பெற வேண்டும்.

தந்தி அடித்தல், கவிதை எழுதுதல், அணைத்துகட்சி கூட்டம், ராஜினாமா நாடகம் , இதெல்லாம் கருணாநிதியின் நேரம் கடத்தும் செயல். கவுண்சிலர் முதல் மத்திய கேபிணட் அமைச்சர் வரை பதவி வகித்துக்கொண்டு இது
போன்ற கண்துடைப்பு வேலை செய்வதில் கில்லாடி கருணாநீதி.

Wednesday, September 17, 2008

திடீர்த் தேவை

சமீபத்தில் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. அப்போது திரையரங்கில் பார் வசதி செய்து கொள்ள அனுமதி வழங்கி உத்தரவு வழங்கும்படி தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே தியேட்டர்களுக்கு பெண்களின் வருகை குறைந்துவிட்டது. இதற்கு தொலைக்காட்சியின் நெடுந்தொடர்கள் - திரைப்படங்கள் வீட்டிலேயே கிடைப்பதும் ஒரு காரணம். முன்பெல்லாம் குடும்பப் படங்கள் அதிகம் வந்ததால் கூட்டமும் கணிசமாக இருந்தது. தற்போதையபடங்கள் அப்படி இல்லை என்பது காலத்தால் ஏற்பட்ட மாற்றம். இந்த நிலையில், பார் வசதி செய்யும் யோசனை தியேட்டர்களுக்கு ஆரோக்கியமானது.

வேலை வாய்ப்பு அலுவலகம்

சென்னை_சாந்தோமில் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி முடித்தோருக்கான வேலை வாய்ப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் பதிவு செய்வதற்காக வந்து போகின்றனர். இதில் வெளியூர்களில் இருந்து கைக் குழந்தைகளுடன் வருவோரும், உடல் ஊனமுற்றோரும் அடங்குவர். ஆனால், போதுமான இடவசதி அங்கு இல்லாத காரணத்தால் வெயிலில் நிற்பது அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், வெளியில் ஆங்காங்கு தரையில் உட்கார்ந்திருக்கும் படியான பரிதாப நிலையும் உள்ளது. எனவே, தற்காலிக கூரைகளை இங்கு அமைக்க வேண்டியது உடனடி அவசியத் தேவையாகும். அதோடு பலரும் வந்து போகும் இடம் என்பதால் வசதியான இடமாகப் பார்த்து வேலைவாய்ப்பு அலுவலகத்தை அங்கு மாற்றி அமைக்கலாம். இது இங்கு வந்து போகும் பலரது நீண்ட நாளைய கோரிக்கை. அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்வார்களா?

ஒரு நிமிடத் தாமதம்

வெற்றியின்போது ஒரு நிமிடம் மட்டும் நிதானித்தால் ஆர்ப்பாட்டம் செய்யத் தோன்றாது. தோல்வியில் ஒரு நிமிடம் நிதானித்தாலோ எல்லாம் இருண்டுவிட்டது என்கிற எதிர்மறைச் சிந்தனை எழாது.

தோல்வியை நெஞ்சிலும், வெற்றியைத் தலையிலும் ஏற்றிக் கொள்ளாதிருக்க இந்த ஒரு நிமிடத் தாமதம் மிகவும் உதவும்..

Sunday, September 14, 2008

தமிழகத்தில் பாதிப்பேர் ஏழைகள்!!




தமிழ்நாட்டில் ஏதோ பாலும், தேனும் ஓடுவதுபோல ஒரு நினைப்பில் நாம் இருக்கும் நிலையில் `தமிழகம் ஒரு பஞ்சைப் பராரி மாநிலம்' என்ற தகவலை வெளியிட்டு ஓர் உலுக்கு உலுக்கியிருக்கிறது உலக வங்கி.
உலக வங்கியால் எடுக்கப்பட்ட வறுமை குறித்த புள்ளிவிவரம், இந்திய அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பாதிப்பேர் ஏழைகள் என அதில் கூறியிருப்பது எதிர்காலம் குறித்த அச்சத்தை சாமானியர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது


குறிப்பாக, ``தமிழகத்தில் இரண்டு பேரில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் ஏழை. இங்கே அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் முழுமையாக மக்களைச் சென்று சேராததுதான் தமிழகத்தில் ஏழைகள் பெருக்கெடுக்கக் காரணம். தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் நாற்பதாயிரம் குழந்தைகள் சத்துக்குறைவால் இறக்கின்றன'' என்று உலக வங்கி சர்வே தகவல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது


தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் ஒரு ஹெக்டேருக்கு 13 டன்னாக இருந்த நெல் உற்பத்தி, தற்போது மூன்று டன்னாகக் குறைந்து விட்டது. நிலம் கெட்டுப்போய், விளைநிலங்களின் பரப்பு குறைந்ததே இதற்குக் காரணம். தமிழக, மத்திய பட்ஜெட்டுகளில் இயற்கை வேளாண்மையை அதிகரிப்பது பற்றி ஒரு வார்த்தைகூட இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. 1947_ம் ஆண்டில் 60 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் விவசாய உற்பத்தி, நடப்பு ஆண்டில் வெறும் 18 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. பெரும் தொழில் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் ஆக்கிரமிப்பு போன்றவையும்தான் இதற்குக் காரணம்.


90_ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த விவசாயம், இன்று ஐந்தாவது இடத்திற்குப் போய்விட்டது. பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன், `நம் நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை அனைத்து மக்களுக்கும் கொடுத்துவிட முடியும். ஆனால், சமமான பங்கீடு என்பது இங்கில்லை' என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு உற்பத்தி, சந்தை வியாபாரிகளிடம் முடங்கிக் கிடக்கிறது. அரசின் திட்டங்கள் ஊழல், சுரண்டல் இல்லாமல் மக்களிடம் சென்று சேர்ந்தால் அறக்கட்டளைகள், இலவசங்கள் என்ற வார்த்தைகளே இல்லாமல் போய்விடும். இல்லாவிட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக வங்கி வெளியிடப் போகும் சர்வே விவரத்தில், உலக ஏழைகளில் நாம் கணிசமான அளவு இன்னும் முன்னேறியிருப்போம்''


தகவல் :- நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் -- விஜயானந்த்

தங்களின் மேலான கருத்துக்களையும் பதிவு செய்யவும்

Sunday, August 17, 2008

வெடிக்கும் உலகம்

திருநெல்வேலிக்கு சென்ற மாதம் சென்றபோது அங்கு பள்ளிகளில் வெடிகுண்டு வைத்து இருபாதாக புரளியால் பள்ளி குழந்தைகள் , பெறோர்கள் பட்டபாட்டை எப்படி சொல்வது . தயவு செய்து இப்படி பட்ட புரளியெ கிளபிவிட வேண்டாம் அப்படி செய்தல் நமக்கு மட்டுமல்ல வருகிற தலைமுறைக்கும் தவறரான முன் உதாரணம்.

தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஏன் ?

இந்தியாவின் உளவுத் துறை நிறுவனங்கள் தங்களது கண்காணிப்பில் தவறி விட்டன. காவல் துறையும், புலனாய்வுத் துறையும் சரியாக செயல்படாமல் உள்ளதும் முக்கியக் காரணம். காவல்துறையும், புலனாய்வுத் துறையும் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். குற்றங்களைத் தடுக்கவும், குற்றங்கள் நடந்த பிறகு அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து தண்டிக்கவும் மேலும் முனைப்பான நடவடிக்கைகள் தேவை.

பயங்கரவாத குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற நடைமுறைகளும் மேம்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் நடந்த இந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து நாட்டில் பயங்கரவாதத் தடை சட்டம் கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்ட தடா மற்றும் பொடா போன்ற சட்டங்களை மீண்டும் கொண்டுவரவேண்டும் ..

Reasons for not spending time in sports

Indian Cities and towns are crowded and no grounds , In early morning of 1980 we could able to notice lot of people practicing in local grounds but today the teenagers running towards to tuitions or traveling to far schools, constantly we are losing sportmenship in our younger generations. Our kids most of time spending time in TV's & Computer Games.

We must watch Olympic 2008 with our kids, ask them to collects photos ,details of winners this will implant olympic spirit within.

It is request

We must bring atleast one sports person in every family. Everyone should spend 1 hour in outdoor sports activity.....

guys please participate in this movement share your ideas