Wednesday, September 17, 2008

திடீர்த் தேவை

சமீபத்தில் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. அப்போது திரையரங்கில் பார் வசதி செய்து கொள்ள அனுமதி வழங்கி உத்தரவு வழங்கும்படி தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே தியேட்டர்களுக்கு பெண்களின் வருகை குறைந்துவிட்டது. இதற்கு தொலைக்காட்சியின் நெடுந்தொடர்கள் - திரைப்படங்கள் வீட்டிலேயே கிடைப்பதும் ஒரு காரணம். முன்பெல்லாம் குடும்பப் படங்கள் அதிகம் வந்ததால் கூட்டமும் கணிசமாக இருந்தது. தற்போதையபடங்கள் அப்படி இல்லை என்பது காலத்தால் ஏற்பட்ட மாற்றம். இந்த நிலையில், பார் வசதி செய்யும் யோசனை தியேட்டர்களுக்கு ஆரோக்கியமானது.

No comments: