Thursday, October 16, 2008

உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால் மத்திய அமைச்சரவையில் இருந்து தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்

"இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதும், அப்பாவி இலங்கை தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ராணுவ தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் தற்போதுள்ள முக்கியமான பிரச்சனை. " : ஜெயலலிதா

எம்பி பதவிக்காலம் இன்னும் 6 மாதத்தில் முடிய உள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழலில் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடந்தால் தற்போதுள்ள எம்பிக்களின் பதவிக்காலம் 3 அல்லது 4 மாதங்களிலேயே முடிந்துவிடும்.ஆனால் எம்பிக்கள் பதவி விலகுவார்கள் என்று தீர்மானத்தி்ல சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மத்திய அமைச்சர்கள் பற்றி அதில் ஒரு வார்த்தைக் கூட இல்லை.

உண்மையிலேயே இலங்கை தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால் மத்திய அமைச்சரவையில் இருந்து திமுகவைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்.மேலும் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவையும் அனைத்து தமிழக எம்பிக்களும் திரும்ப பெற வேண்டும்.

தந்தி அடித்தல், கவிதை எழுதுதல், அணைத்துகட்சி கூட்டம், ராஜினாமா நாடகம் , இதெல்லாம் கருணாநிதியின் நேரம் கடத்தும் செயல். கவுண்சிலர் முதல் மத்திய கேபிணட் அமைச்சர் வரை பதவி வகித்துக்கொண்டு இது
போன்ற கண்துடைப்பு வேலை செய்வதில் கில்லாடி கருணாநீதி.