சென்னை_சாந்தோமில் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி முடித்தோருக்கான வேலை வாய்ப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் பதிவு செய்வதற்காக வந்து போகின்றனர். இதில் வெளியூர்களில் இருந்து கைக் குழந்தைகளுடன் வருவோரும், உடல் ஊனமுற்றோரும் அடங்குவர். ஆனால், போதுமான இடவசதி அங்கு இல்லாத காரணத்தால் வெயிலில் நிற்பது அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், வெளியில் ஆங்காங்கு தரையில் உட்கார்ந்திருக்கும் படியான பரிதாப நிலையும் உள்ளது. எனவே, தற்காலிக கூரைகளை இங்கு அமைக்க வேண்டியது உடனடி அவசியத் தேவையாகும். அதோடு பலரும் வந்து போகும் இடம் என்பதால் வசதியான இடமாகப் பார்த்து வேலைவாய்ப்பு அலுவலகத்தை அங்கு மாற்றி அமைக்கலாம். இது இங்கு வந்து போகும் பலரது நீண்ட நாளைய கோரிக்கை. அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்வார்களா?
Wednesday, September 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment