Thursday, November 6, 2008

நெல்லையி்ல் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாலைமறியல், கல்வீச்சு, பஸ்சுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்களால் பல கிராமங்களுக்கு நான்காவது நாளாக பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் பஸ் போக்குவரத்து இல்லாமல் துண்டிக்கப்பட்டது.இதனால் கிராம மக்கள் லோடு ஆட்டோ, வேன் உள்ளிடடவைகளில் பயணம் செய்தனர். இதனால் பள்ளி, மாணவ, மாணவிகள் பல மைல் தூரம் நடந்தே பள்ளிக்கு சென்றனர். நெல்லை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் 5 பஸ்களாக சேர்த்து இயக்கப்பட்டன....

யார் இந்த டாக்டர் கிருஷ்ணசாமி ?.. என்ன வேண்டும் இவருக்கு ? சத்தியமா இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றாமல் தூங்கமாட்டர்கள் போல ?

No comments: