Saturday, November 15, 2008

ஞாபகம் வருமென...

இலக்கை நோக்கியே
வாழ்க்கை பயணங்கள்!
பயணத்திற்குப்பணம்
வேண்டுமே!...பணம் மட்டும்பயணத்தை
மாற்றுவதா?
நோக்கமே இலக்கை நோக்கி...
இலக்கையும்!
பயணத்தையும்!
பணத்தையும்!
சரி வர ஒன்று சேர்த்தோம்...

நேரெதிரான
ஒவ்வொன்றையும் இணைப்பதே
இலக்காகி...
எங்கோ ஆரம்பித்து! இன்று எங்கோ...
என்றாவது ஒரு நாள்
இலக்கிற்கு ஞாபகம் வருமென...
இலக்கோடு காத்திருக்கிறேன்...
இலக்கில்லாமல்

-- அய்யா.புவன் (தமிழ் முரசு - சிங்கப்பூர்)

No comments: